இடுகைகள்

எட்டு போட்டு நடந்தால் ஆரோக்கியம் உங்கள் வசம்

படம்
வணக்கம் மீண்டும் ஒரு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி! ஆரோக்கியம் அது என்ன விலை? என கேட்கும் காலம் ஆகி விட்டது. பழைய உணவு பழக்க வழக்க முறைகள் மலையேறி போகவே, இன்று நம் ஆரோக்கியம் கேள்வி குறியாய் இருக்கும் நிலை. நாம் உடல்நலத்தை சிறப்பாக கையாள இப்போது நமக்கு கிடைத்து இருக்கும் ஒரு வரப்பிரசாதம் தான் எட்டு வடிவில் கோடு போட்டு நடக்கும் முறை. வீட்டில் மாடியிலோ, பூங்காக்கள், விளையாட்டு திடல் என இடம் கிடைக்கும் இடத்தில் 8 வடிவத்தில் வரைந்து கூழாங்கல் இட்டு அதில் நடக்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகின்றன. எட்டு போடும் முறை: ‌‌‌‌ தெற்கு வடக்காக ஒரு ஒரு வட்டமும் 8 அடி நீளத்தில் அமையலாம் அல்லது 10 அடியிலும் அமையலாம். மற்றபடி 8 அடிக்கு குறையாமல் அமைய வேண்டும். எட்டு அடிக்கும் குறையும் போது நடக்கும் நேரத்தில் மயக்கம், உடற்சோர்வு ஏற்படக்கூடும். எனவே அளவை எட்டு அடிக்கு மேல் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். வரைந்த எட்டு வடிவத்தில் கூழாங்கற்கள் கொண்டு நடப்பதற்கு ஏதுவாக பதிக்க வேண்டும். பயன்கள்: காலை, மாலை அல்லது இரவு இரு வேளைகளில் குறைந்தது 20 நிமி...

திங்கட்கிழமை காலை கிறுகிறுக்கும் அனைத்து தரப்பினர்

          அ ட போங்கப்பா இந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஏன்தான் வேகமாக ஓடுகின்றதோ...? இது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மட்டும் இல்ல ஆபீஸ் போகின்ற ஆண்கள் பெண்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் ஏற்படுகின்ற சலிப்பு.           ஞா யிற்றுக்கிழமை விடுமுறையை காலை 10,11 மணி வரை தூக்கம் போட்டு என்ஜாய் பன்னிட்டு, பிடிச்ச அசைவ உணவுகள் சமையல் செய்து சாப்பிட்டு வீட்டில் அனைவரும் வார நாட்களில் நடந்த நிகழ்வுகள், முக்கிய விஷயங்களை பேசி மாலை 3 மணிக்கு மேல் நகரங்களில் வசிப்பவர்கள் வெளியில் பொழுதை கழிக்க சென்றுவிடுகிறார்கள் என்றால் கிராமங்களில் விளையாட்டு, அரட்டை, உறவினர் நண்பர்கள் வீடு என பொழுதை கழித்து விட ஞாயிற்றுக்கிழமை என்பது "உசைன் போல்ட்" ஓடும் வேகத்தை விட விரைவாக ஓடி விடுகிறது.        தி ங்கட்கிழமை காலை விடிஞ்சா போதும் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி, பணியில் இருப்பவராக இருந்தாலும் சரி ஏன்டா விடிஞ்சது என்ற மனநிலையிலேயே இருப்பர். அதுவும் இல்லத்து அரசிகள் பாடு கேட்கவா வேண்டும்.. வார நாட்களிலும் வேலை பளு. ஞாயிற்றுக்கிழ...

மாமியார் மருமகள் ஜோக்ஸ்

  மாமியார் :   என்னம்மா உனக்கு                                 என்ன சமைக்க தெரியும்..?  புது மருமகள் :                             ஃப்ரிட்ஜில் இருக்கிற முதல் நாள் குழம்ப நல்லா பதமா சுட வச்சு தருவேன் அத்தை. மாமியார் : .....!?..?!?...!?

வெயில் காலத்தில் என்ன சாப்பிட கூடாது

வந்தாச்சு வெயில் காலம்             மா ர்ச் பாதி நாட்களில் இருந்தே வாட்டி வதைக்கிறது சூரியன். இந்த காலகட்டத்தில் நாம் நம் உடல்நிலை சார்ந்து அக்கறையுடன் இருக்க வேண்டும்.           வெ யில் காலத்தில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை விட என்னவெல்லாம் சாப்பிட கூடாது என்று பார்ப்போம்.        சி க்கன், இறால், நண்டு,  போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அவை சில உடல் சூட்டை கிளப்பி, உடலில் இருந்து நீரை வெளியேற்றி விட வாய்ப்புள்ளது.            எ ண்ணெய்யில் செய்யும் பலகாரங்களை தவிர்க்க வேண்டும்.        கா ரம் நிறைந்த உணவு, உப்பு , புளியை  குறைந்த அளவில் எடுத்து கொள்வது நல்லது.           பா ல், தயிர் போன்றவற்றால் உடல் வெப்பம் அதிரிக்கும்.        கா பி, தேநீர் குறைத்துக் கொண்டால் நலம்.        கு ளிர்பானங்களை தவிர்த்து தண்ணீர் அதிகமாக பருகினால் உடல் குளிர்ச்சி தரும்.

அனைத்தும் அவன் செயல்!

    🙏 எல்லாம் அவன் செயல் 🙏 ✍️நீ வாழ்வில் எதை இழந்து நிற்கின்றாயோ அதற்கு ஈடாக எதையாவது பெறுவாய் என்பது நிச்சயம். இறைவனின் மீதான நம்பிக்கையை நீ இழப்பாய் ஆனால் அதை ஈடு செய்யும் விதம் உன்னால் எதையும் தேட முடியாது என்பது உண்மை  🍁மற்றவர்களிடம் இருப்பதில் எவை உங்களிடம் இல்லை என்று சிந்திப்பதை விட மற்றவர்களிடம் இல்லாதது எவை உங்களிடம் உள்ளது என்று தேடிப்பாருங்கள்! எல்லாம் அவன் செயல் 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

மார்ச் 28 வானில் நடக்கும் அதிசய நிகழ்வு! 5 கிரகங்களை ஒன்றாக பார்க்கலாம் மக்களே!!

ஃபாக்ஸ் நியூஸின் அறிவிப்பில், மார்ச் 28 அன்று சூரியன் மறைந்த பிறகு நீங்கள் பார்க்க போகும் கிரகங்களில் செவ்வாய், வீனஸ், வியாழன், புதன் மற்றும் யுரேனஸ் ஆகியவை அடங்கும். மேற்கண்ட ஃபாக்ஸ் நியூஸின் தகவல்படி, வியாழன் புதனை விட சற்று பிரகாசமாக காணப்படும். வீனஸ் அனைத்து கிரகங்களை விட பிரகாசமான கிரகமாக இருக்கும் எனவும் தகவல் கூறியுள்ளது... என்ன மக்களே வானில் அதிசய நிகழ்வு காண தயாரா!!!??